விறு விறுவென தயாராகும் ஜல்லிக்கட்டு ஏற்பாடு

x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு தடுப்புகளை அமைப்பதற்காக 120 டன் சவுக்கு மரங்களும், 150 பண்டல் சணலும் பயன்படுத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவனியாபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 26 லட்சம் ரூபாய் செலவில் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருப்பதாக ஜல்லிக்கட்டு பணி குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்