மாசமான 50 நாளில் தீராத வலி.. திருமணமான 3 மாதத்தில் உயிர்விட்ட கர்ப்பிணி..

பாபநாசம் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தீராத வயிறு வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்டக்குடி கிரமத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவருக்கும் குருலட்சுமி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த குருலட்சுமி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் பலரை நாடியும் பலனளிக்காததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குருலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுதித்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், தற்கொலைக்கு முன் அவர் வாக்குமூலம் அளித்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்