காவலரிடம் ரகளை செய்த பாமகவினர் - நெல்லையில் அதிர்ச்சி

x

நெல்லை, பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில், காவலரிடம் அக்கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இக்கூட்டத்தில், பேசிய பாமக நிர்வாகிகள் காவல்துறையினரை விமர்சித்ததாக தெரிகிறது. அப்போதும் அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஹரிஹரன், காவல்துறையினரை அவமரியாதையாக பேச வேண்டாமெனக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பாமகவினர், அவரை சுற்றி நின்று ரகளையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்ற காவலர்கள் அவரை அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்