இரவு நேரம்..அடர் இருட்டு..பெண்ணிடம் காட்டிய கைவரிசை..ஆனால்..ஐயோ அம்மானு கதறி ஓட்டம் பிடித்த திருடன்

x

சென்னை மடிப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் ஐடி ஊழியரைத் தாக்கி மர்ம நபர் நகையைப் பறித்துச் செல்ல முயலும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... சதாசிவம் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த அனிதா பணி முடிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்... அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி அனிதாவைத் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினைப் பறிக்க முயன்றார். திருடனிடம் இருந்து தப்ப முயன்று கீழே விழுந்த அனிதா சத்தம் போட்ட நிலையில், அங்கு அக்கம்பக்கத்தினர் வருவதைக் கண்டதும் அந்த மர்ம நபர் தப்பி ஓடினார்... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்