திடீரென கண் திறந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்...நேருக்கு நேர் பார்த்த அர்ச்சகர், பக்தர்கள்

x

திடீரென கண் திறந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்...நேருக்கு நேர் பார்த்த அர்ச்சகர், பக்தர்கள் - ஓடோடி வந்த மக்கள் கூட்டம்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், தை மாதம் வருஷாபிஷேகமும் நடைபெற்றது. 21 நாட்கள் ஆன நிலையில் வழக்கம்போல் தொடர்ந்து நித்திய பூஜை செய்ய ஆயத்தமான நேரத்தில் கோவிலில் அர்ச்சகர் தர்மராஜன், அம்மன் சிலை கண் திறந்ததாகவும், பக்தர்களும் பார்த்துவிட்டு சுவாமி கண் திறந்திருப்பதை உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த தகவல் பரவியதும், சுற்றுவட்டார கிராம மக்கள், கோயிலில் குவிந்து, அம்பாள் கண் திறந்த காட்சியை கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்