"தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு வர போகும் முக்கிய கால்"

x

"நீங்கள் நலமா?" என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்.'மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, உங்கள் ஊரில் கலெக்டர்', கலைஞர் மகளிர் உரிமை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் பயன்கள் உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக, ஒரு புதிய திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கு 'நீங்கள் நலமா? என பெயரிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்க உள்ளனர். மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் அரசின் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நலத்திட்டங்கள் பற்றியும், அடுத்தக்கட்டமாக அரசுத் துறைகளில் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் கருத்துக்கள் பெற்று, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்