இரண்டு கார்.. 6 கொள்ளையர்கள்.. உடைக்கப்பட்ட CCTV கேமராக்கள்..

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு விட்டு, தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அருண்பிரகாஷின் பண்ணை வீட்டிற்கு 2 கார்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சிசிடிவிக்களை உடைத்து விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அருண்பிரகாஷின் மனைவி சத்தமிட அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக புகாரில் வழக்குபதிந்த போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்