தீக்குளித்த 16 வயது சிறுமி - வெளிவந்த பகீர் பின்னணி

x

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த 16 வயது சிறுமி, குடும்ப வறுமை காரணமாக பல்பொருள் அங்காடி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது சிறுமிக்கும், செருதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ்குமார், தனது காதலைக் கூற, 16 வயது சிறுமியும் அவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவர, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூருக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை புகார் அளித்த நிலையில், போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜேஷ்குமார் தன்னை ஏமாற்றியதை அறிந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 85 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை, தகவல் அறிந்து வந்த பெற்றோர் கதறி அழுதது வேதனை அளித்தது. இந்த நிலையில்,


Next Story

மேலும் செய்திகள்