ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா... கிடா வெட்டி கறி விருந்து படைத்து வழிபாடு

x

திண்டுக்கல் மாவட்டம் புன்னப்பட்டி கிராமம் உலுப்பகுடி வேட்டைக்காரன் சாமி கோவில் பங்குனி விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உரித்து சுத்தம் செய்து சமைத்தனர். பின்னர் வேட்டைக்காரன் சாமிக்கு படைக்கப்பட்ட ஆட்டுக்கறி குழம்பு 5000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆண்கள் பாத்திரங்களை கொண்டுவந்து அதில் சாதம் மற்றும் கறிக்குழம்பை வாங்கிச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்