மருதமலை கோயில் தேரோட்டத்தில் நடந்த சம்பவம்.. அலறிய சிறுவன்... ஒரு நொடி அதிர்ந்த பக்தர்கள்

x

கோவை மருதமலை முருகன் கோயில் தங்க தேரோட்டத்தில் தேர் சக்கரம் ஏறியதில் சிறுவன் படுகாயமடைந்தான். சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பக்தர்கள் 60 பேர் தங்கள் குடும்பத்தினருடன் கோவைக்குச் சுற்றுலா வந்தனர். மருதமலை முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்தபோது தேரோட்டம் நடந்தது. அப்போது, பக்தர்களால் இழுத்து வரப்பட்ட தங்கதேர், அங்கு நின்றிருந்த சுப்ரமணி என்பவரது மகன் ஆரவ்-வின் இடது காலில் ஏறி இறங்கியது. தொடர்ந்து, அலறிய சிறுவனை, பக்தர்களும் பெற்றோரும் தேரை நிறுத்தி மீட்டனர். சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேரோட்டத்தில் கோயில் பணியாளர்கள் உடன் வராததால் பக்தர்களே இழுக்கும் நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே சிறுவன் காலில் சக்கரம் ஏறி இறங்கியதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்