வீட்டு வேலையில் ஏற்பட்ட விபரீதம் - துடிதுடித்து பலியான நபர்

x

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான முஹம்மது உசேன், சென்டரிங் கட்டுமான பணிகள் நடைபெறும் வீட்டில் எலக்ட்ரிக் பைப்புகளை பதித்தபோது, உயர் அழுத்த மின் கம்பியில் சென்டரிங் கம்பி பட்டு எதிர்பாராத விதமாக உசேன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறப்பு தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்