வீடு வீடாக சென்று வாக்கு திரட்டிய பொன்.ராதாகிருஷ்ணன் - உற்சாகமாக வரவேற்ற மக்கள்

x

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வீதிகள் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரசாரத்தை தொடர்ந்த பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்