பிழைப்பிற்காக வெளியூர் வந்த கூலித்தொழிலாளி.. பணியின்போதே பறிபோன உயிர்..

x

பிழைப்பிற்காக வெளியூர் வந்த கூலித்தொழிலாளி.. பணியின்போதே பறிபோன உயிர்.. 2 கைக்குழந்தைகளுடன் தனியே தவிக்கும் மனைவி

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளிக்குத் திருமணமாகி 2 மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருத்தணியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில்,

முரளி ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதிய கட்டிடத்திற்கான கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்நிறுவனம் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முரளி பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலை உடனடியாக முரளியின் மனைவியான மீனாவுக்கு தெரிவிக்கவில்லை என்றும் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது எனவும் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க மீனா புகார் மனு அளித்துள்ளார். கணவனின் இறப்பால் 2 கைக்குழந்தைகளோடு இளம்பெண் நிற்கதியாய் நிற்பது பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்