"விஷம் போல் ஏறுது.. கவலை இல்லையா?" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

x

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்