"இதை கைவிடாவிட்டால்.. வரும் 7ம் தேதி.." - எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்

x

"இதை கைவிடாவிட்டால்.. வரும் 7ம் தேதி.." - எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்

திருப்போரூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான திருப்போரூர், தண்டலம், கண்ணகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கர் விவசாய நிலங்களை திருப்போரூர் கந்தசாமி கோவில் பெயரில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை காலி செய்ய வலியுறுத்துவதை கண்டித்தும், விவசாய நிலங்களை ஏலம் விடுவதை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. விவசாயிகளின் நிலங்களை ஏலம் விடும் போக்கை தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் கைவிடாவிட்டால், வரும் 7ம் தேதி மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சாமி நடராஜன் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்