சென்னையில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் வெடித்த சம்பவம் - மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

x

நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக அப்பகுதி பொதுமக்களும், எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவும், எம்பி டி.ஆர்.பாலுவை சந்தித்து விவரங்களைத் தெரிவித்தனர்... இவ்விபத்து குறித்து மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு உடனடியாக விரிவான கடிதம் எழுதியுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்... உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் சிலிண்டர்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் எண்ணெய் நிறுவனங்கள் சமரசம் செய்கின்றனவா?... சிலிண்டர்களை மக்களுக்கு விநியோகம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில் தவறு நேர்ந்துள்ளதா? உள்ளிட்ட பல கேள்விகளை பொதுமக்கள் எழுப்பியுள்ள படியால், உரிய விசாரணை நடத்தி கேஸ் சிலிண்டர்களை முழு பாதுகாப்புடன் மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்