சென்னையில் ஹோட்டல், திருமண மண்டபத்திற்கு சீல் - அதிகாரிகள் அதிரடி

x

பூந்தமல்லி அருகே உள்ள வரதராஜபுரம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

வரதராஜபுரம் சித்திபுத்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயா தலைமையிலான குழு முன்னிலையில், உணவகம், திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதில் உள்ள பொருட்களை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டபம், உணவகத்திற்கு வெளியே அறிவிப்பு பலகை வைத்த வருவாய்த்துறை அலுவலர்கள், நுழைவு வாயில் கதவில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்