பெண்ணின் வயிற்றில் 5 ஆண்டுகளாக இருந்த அலுமினியம் - தனியார் மருத்துவமனை மீது பரபரப்பு புகார்..

x

தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து அலுமினிய மூடி எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்குடியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தனது தாயார் வசந்தாவிற்கு 5 ஆண்டுகளுக்கு முன் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதன் பின்னர் அவ்வப்போது ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார். அண்மையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அலுமினிய மூடி இருப்பதாக கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றியதாக கூறிய மகாலட்சுமி, தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இந்த புகாரை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இதுபோன்ற பொருள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவது இல்லை எனவும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்