`அவர் எனக்கு தான் சொந்தம்` -முதல் தாரத்தை இழுத்து போட்டு சாத்திய 2ம் தாரம் - களேபரமான போலீஸ் ஸ்டேஷன்

x

`அவர் எனக்கு தான் சொந்தம்` - முதல் தாரத்தை இழுத்து போட்டு சாத்திய 2ம் தாரம் - களேபரமான போலீஸ் ஸ்டேஷன்

#thanthitv #fight #ladiesfight

தேனி, ஆண்டிப்பட்டியை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்திருக்கிறார். இந்நிலையில் அந்நபர் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நபரின் முதல் மனைவி போலீசில் புகாரளித்த நிலையில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் காவல்நிலையம் அழைத்துள்ளனர். இதன்படி, இரு மனைவிகள் மற்றும் அவரது உறவினர்களும் விசாரணைக்காக ஆண்டிப்பட்டி மகளிர் காவல்நிலையம் வந்த நிலையில், திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில், காவல்நிலையம் முன்பே இரு மனைவிகள் மற்றும் உறவினர்களும் குடுமிப்பிடி சண்டை போட்டு ஒருவரையொருவர் கண்மூடித்தனமாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இரு தரப்பையும் சமதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்