ஆஞ்சநேயருக்கு 10 பவுன் சங்கிலி காணிக்கை... வேண்டுதல் நிறைவேறியதால் பக்தர் நேர்த்திக்கடன்

x

வேண்டுதல் நிறைவேறியதால் சேலlத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 10 பவுன் தங்க சங்கிலியை காணிக்கையாக செலுத்தினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற புஷ்பாஞ்சலியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதனிடையே சேலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், வேண்டுதல் நிறைவேறியதால் ஆஞ்சநேயருக்கு 10 பவுன் தங்க சங்கிலியை காணிக்கையாக செலுத்தினார். பட்டாச்சாரியர்கள் அந்த சங்கிலியை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவித்ததோடு, சிறப்பு பூஜை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்