மூட்டை மூட்டையாக குட்கா! மூச்சுத்திணறிய சேலம்! தொக்காக தூக்கிய அதிகாரிகள்.. பரபரப்பு சம்பவம்

x

சேலம் மாவட்டம் மேச்சேரியில் லாரியில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருந்து மேச்சேரிக்கு புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மேச்சேரியை சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்தமான லாரியில் பான் மசாலா கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்த போது, 100 மூட்டைகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை டன் குட்கா பொருட்கள் இருந்த‌து தெரிய வந்த‌து. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்