நோயாளிகளுக்கு ஊசி போடும் காவலாளி - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திருக்கோவிலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளி நோயாளிக்கு ஊசி போடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் சரிவர பணிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு இரவு நேர காவலாளியாக பணியாற்றி வரும் தேவேந்திரன், நோயாளிகளுக்கு ஊசி போடுவது வாடிக்கையாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்