அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

x

அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாய், அபுதாபியில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய சுங்கத்துறை, 4பேரை கைது செய்தது.

இது குறித்த ரகசிய தகவலை தொடர்ந்து, துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை, சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதேபோல், துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த முகமது பசலின் பஹில் என்பவரை சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

அதேபோல் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் வந்த சிவகங்கையை சேர்ந்த வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்தும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

குவைத்தில் இருந்து வந்தவரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் கடத்தி வந்த 3கிலோ தங்கத்தை பறிமுதல்செய்த சுங்கத்துறை, 4 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்