புதிய சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்... சென்னையில் சமத்துவ முறையில் நடைபெற்ற பூஜை

x

சென்னையில், புதிய சுகாதார நிலையத்திற்கு சமத்துவ முறையில் அடிக்கல் நாட்டப்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் இந்து முறைப்படி பூஜையும், பின்னர் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர், நானும் கிறிஸ்துவ முறைப்படி ஜெபம் பண்ணவா எனக்கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்