குடையில் சிக்கிய குளத்து மீன் | Fish | Thenkasi

x

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், சாலையில் தேங்கிய தண்ணீரில் துள்ளிக் குதித்த மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்து குடைகளில் அள்ளிச் சென்றனர். தொட்டியான்குளத்தின் கரை உடைந்ததால் குளத்தின் தண்ணீர், நெட்டூர் சாலை மற்றும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்தது. குளக்கரையின் உடைப்பை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மண்ணைக் கொட்டி சரி செய்த நிலையில், தண்ணீரில் அடித்து வரப்பட்ட மீன்கள் சாலைகளில் தேங்கிய சிறிதளவு தண்ணீரில் துள்ளிக் குதித்தன. இதனை வேடிக்கை பார்க்க வந்தவர்கள், மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்