பேசுவதை நிறுத்திய பேஸ்புக் காதலி... நடுரோட்டில் வைத்து கொடூரமாக கத்தியால் குத்திய காதலன் - குமரியில் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்துள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ரஞ்சித். கொத்தனராக வேலை பார்த்து வரும் இவருக்கு, சமூக வலைதளம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதில், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ரஞ்சித்தின் நடவடிக்கைகளில் மாற்றம் வரவே அந்த பெண் அவருடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அந்த பெண் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் மறைந்திருந்து, அவரை கத்தியால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்