பிரம்மாண்ட பலூனை பறக்கவிட்ட முன்னாள் அமைச்சர்

x

கோவை மாவட்டம், ஆச்சிபட்டியில் அதிமுக எழுச்சி மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர் ஒட்டிய ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன் கலந்து கொண்டு பலூனை வானில் பறக்க விட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, காவல்துறை மிகவும் மோசமாக நடக்கின்றனர் என்றும், திமுகவின் அடிமையாக செயல்படுகின்றனர் என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்