எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழா.. புரட்டிப்போட்ட 144 தடை.. கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு
மதுரை மாவட்டம் எழுமலை முத்தாலம்மன் கோயில் திருவிழாவை பிரச்சினைக்குரிய உத்தப்புரம் கிராமத்தில் நடத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உசிலம்பட்டி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். வருகிற 26ஆம் தேதி இரவு 8 மணி வரை உத்தப்புரம் கிராமத்தில் 144 தடை அமலில் இருக்கும் எனவும் மக்கள் கூட்டமாக கூடவோ, வெளி ஆட்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story