தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

x

முத்தாரம்மன் கோயிலின் தசரா திருவிழாவிற்காக, பக்தர்கள் விரதம் எடுக்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோயிலின் தசரா திருவிழா, அக்டோபர் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 24ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தசரா விழாவில் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதில் காளி, அனுமான், போலீஸ், பெண், நர்ஸ், குறவன்- குறத்தி, முனிவர் ஆகிய வேடங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த வேடங்கள் அணிவதற்காக, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் எடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்