செல்போன் கடைக்குள் புகுந்து கல்லூரி மாணவர்கள் கைவரிசை - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடு பகுதியில் கடையின் ஷட்டரை உடைத்து விலையுயர்ந்த செல்போன்களை கொள்ளையடித்து சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மாலிக். இவர் கடையாலு மூடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் இவரது கடையின் ஷட்டரை உடைத்து மர்மநபர்கள் 16 செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த போலீசார், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த எபி, ரஞ்சித், அனந்து மற்றும் விஷ்னு ஆகிய நால்வரை கைது செய்தனர். கல்லூரி மாணவர்களான நால்வரும், கேரளாவில் பல திருட்டு வழக்குகளில் சிக்கியிருப்பது தெரியவர, நால்வரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்