பக்தர்களிடம் பணம் வசூல் - கோயில் அறங்காவலருக்கு மக்கள் வைத்த செக்..!

x

ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோயிலுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. இந்த கோயிலின் அறங்காவலர் அணுவர்ஷினியும், அவருடைய தந்தை சீனிவாசனும், பக்தர்களிடம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம், பாகல்பட்டி கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். கோயிலுக்காக வசூலிக்கும் பணத்தை தங்கள் சொந்த செலவிற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்