மூடிய மணல் குவாரிகள் - அதிரடி சோதனையில் இறங்கிய ED -நீர்வளத்துறைக்கு பறந்த கேள்வி.. கரூரில் பரபரப்பு

x

நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே அவை மூடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மணல் குவாரிகளில் கடந்த வாரம் 6 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய ராணுவ பாதுகாப்புப்படை வீரர்களுடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதை கண்ட அதிகாரிகள், நீர்வளத்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்