சாலையின் நடுவே விழுந்த ஆளுயர பள்ளம்... சமூக பொறுப்பை கையில் எடுத்த சிறுவர்கள்

x

வேலூரில் சாலையில் விழுந்த பள்ளம் குறித்து சிறுவர்கள் முன்னெச்சரிக்கை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் அருகே சாலையின் நடுவே இருந்த குடிநீர் பைப் உடைந்தது. இதனால் ஏற்பட்ட நீர்கசிவு காரணமாக சாலையில் ஆள்உயர பள்ளம் ஏற்பட்டது. இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது எனக்கருதிய, அப்பகுதி சிறுவர்கள் தாங்களாகவே எச்சரிக்கை வாசகம் தயாரித்து, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்