சென்னையை உலுக்கிய ஆணவ கொலை.. மறுக்கும் உறவினர்கள்..தொடரும் மர்மம்.. "கொடுமையின் உச்சமாக நிகழ்ந்த சம்பவம்"

x

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கணவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விரக்தியில், இளம் பெண் சர்மிளா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், பெண்ணின் தற்கொலைக்கு காரணமான சர்மிளாவின் பெற்றோரை கைது செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்திய உறவினர்கள், சர்மிளாவின் உடலுக்கு உடற்கூராய்வு செய்ய விடாமலும், அவரின் உடலை வாங்க மறுத்தும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து, வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் முன்னிலையில் சர்மிளாவின் உடலுக்கு உடற்கூராய்வு சோதனை நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்