ரயிலில் சிக்கிய `பார்சல்' ...குட்கா கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் தலைமை காவலர்

x

சென்னையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட மூன்று கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பேசின் பிரிஜ் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்திரன் என்பரிடம் இருந்து 3 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சந்திரன் ரயில்வே பாதுகாப்பு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்