சரக்கு லாரிக்குள் 1,400 கிலோ தங்கம்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன சத்யபிரதா சாகு முக்கிய தகவல்

x

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு சதய்பிரதா சாகு அளித்த தகவலின்படி, குன்றத்தூரில் சரக்கு வாகனத்தில் 1,400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி முதற்கட்ட தகவல் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டார். இந்த சூழலில், வரும் 17ம் தேதிக்குள் தபால் வாக்குகள் தொடர்பான பணி நிறைவு பெறும் எனவும், ராணுவ வீரர்கள் ஜூன் 4 தேதி காலை 8 மணிக்குள் கிடைக்கும் வகையில் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரும் 18ம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் என சத்யபிரதா சாகு குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்