சென்னை தி.நகர் தொழிலதிபரை கொன்ற மதுரை முதியவர் `திடுக்' வாக்குமூலம்.. அதிர்ச்சி காட்சிகள்

x

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதால், ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் பழனிச்சாமி என்பவர், தொழில் சம்பந்தமாக வேளச்சேரி சென்றபோது, அவரை வழிமறித்த கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவத்தில், மதுரையை சேர்ந்த சுப்பையன் என்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 28 லட்சம் ரூபாய் பணத்தை பழனிச்சாமி, ஏமாற்றியதால் இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்