சென்னையில் கூகுள் மேப்பால் விபரீதம்...7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்?..வீட்டு வாசலில் உறங்கியோருக்கு நேர்ந்த கதி - துயர விழாவான சுப விழா

x

சென்னையில் அதிகாலை வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி வந்த பெண் ஏற்றி இறக்கியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வந்துள்ளனர். இரவு வீட்டில் இடப்பற்றாக்குறையால் உறவினர்கள் சிலர் வீட்டின் முன்புள்ள சாலையில் உறங்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாக காரில் வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த வைஷாலி என்ற பெண் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறாது. ஆனால் அந்த சாலை முட்டு சந்து என்று தெரியாததால் காரை நிறுத்திய அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிவந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ள நிலையில், மதுபோதையில் காரை ஒட்டி வந்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்