அலறிய எச்சரிக்கை மணி... சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு | Chennai Airport

x

டெல்லி செல்லும் விமானத்தின் அவசரக் கால கதவை திறந்த பயணி, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. அப்போது, திடீரென விமானத்தின் அவசர கால கதவை திறந்ததற்கான அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவசர கால பட்டனை அழுத்திய பயணியை விமான ஊழியர்கள், விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். வித்தியாசமாக பட்டன் இருந்ததால் அதனை தெரியாமல் அழுத்தியதாக பயணி கூறிய விளக்கத்தை விமான ஊழியர்கள் மறுத்தனர். இதனையடுத்து விமான நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவசர கால கதவை திறந்த நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சரோஸ் என்பதும் அவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்