கே.சி.வீரமணி உட்பட 900 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு | TN Police

x

ராணிப்பேட்டையில் உரிய அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உட்பட 906 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் எம்.ஜி.ஆர். நகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்பிடிப்பில் இருந்த 528 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் மாற்று இடம் தராமல் வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறி, அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்