கால்வாய் சுத்தம் செய்யும் பணி - வெறும் கையில் அள்ளிய பணியாளர்கள் - ஷாக்கான பூந்தமல்லி மக்கள்

x

பூந்தமல்லி நகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் கால்வாயை தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மழை நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சேகரிக்கப்படும் குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை கோணிப் பைகளில் கட்டி வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்