"பசியை கண்ட்ரோல் பண்ண முடியல"ஸ்கூல் கேன்டீனை உடைத்த குறும்பு கரடி.அச்சத்தில் மக்கள் வைரலாகும் வீடியோ

x

குன்னூர் அருவங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்துக்குள் நள்ளிரவில் நுழைந்த கரடி, அங்குள்ள கேன்டீனை உடைத்து உணவு பொருட்களை உட்கொண்டது. மேலும், சில பொருட்களை பள்ளி நுழைவாயிலில் கொண்டு வந்து கரடி உட்கொண்டதை, இரவு நேர காவலர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பான காட்சி இணையத்தில் வெளியான நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளிக்குள் நுழைந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்