மாந்தோப்பில் பகீர்..சிறுமியும்,இளைஞரும் விபரீத முடிவு

x

பெரியகுளம் அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. 22 வயதான இவர், 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனிடையே, இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலின் மீதான எதிர்ப்பு மேலும் கூடியுள்ளது. இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு இளைஞர் மாரிமுத்து மீது சிறுமியின் பெற்றோர் போக்சோவின் கீழ் போலீசில் புகாரளித்ததாகவும், இதனால் இளைஞர் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்பின்பும் இருவரும் காதலை தொடர்ந்து வந்த நிலையில், காந்திநகர் அருகே உள்ள மாந்தோப்பில் இருவரும் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்