நாளை தி.மலை தீப திருவிழாவுக்கு வரும் வெளிமாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

x

திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்..

கார்த்திகை தீபத்திருவிழாவின் 10-ஆம் நாள் விழா நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 14 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கோயில் வளாகம் மற்றும் கிரிவல பாதையில் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இது மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கார் பார்க்கிங் வசதிக்காக பிரத்தியேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதன் மூலம் கார் பார்க்கிங் வசதிகளை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்