நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்

x

கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர் பாபி சிம்ஹா புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதிக பணம் பெற்ற ஒப்பந்ததாரர், குறைந்த செலவில் கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட ஒப்பந்ததாரர் பணியை பாதியிலேயே நிறுத்தி உள்ளார். இதையடுத்து, பாபி சிம்ஹா கொடைக்கானால் காவல் நிலையம் மற்றும் கொடைக்கானல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் பாபிஷிம்ஹா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களான ஜமீர் மற்றும் அவரது தந்தையான காசீம் முகமது, இவர்களுக்கு ஆதரவாக சென்ற கொடைக்கானலை சேர்ந்த உசேன் மற்றும் பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்