சென்னை ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த ஒற்றை பை

x

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் பயணிகள் காத்திருக்கும் இருக்கையில் ஒரு மர்ம பை நீண்ட நேரமாக கிடந்துள்ளது. இதனை கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யாருடையது என்பது குறித்து விசாரித்தனர். யாரும் அந்த பையை உரிமை கோராததால் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். பின்னர் சந்தேகப்படும்படி அதில் வெடிகுண்டு எதுவும் இல்லாததால் பயணிகள் யாரேனும் தவறவிட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்