இரவில் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. உடல் விறைத்து இறந்த நபர் - அம்பலமான அந்தரங்க விபரீதம்

x

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் - ராஜவாய்க்கால் சாலையில், சாக்கில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத அறிக்கையில் அந்த நபர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், இறந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த முனியாண்டி என்பதை கண்டறிந்தனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த அவர், இரவில் உல்லாசமாக இருந்துவிட்டு சென்றபோது தோட்டத்திற்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதை அறிந்த தோட்ட உரிமையாளர் சகாயநாதன், தன்னிடம் வேலை பார்க்கும் 4 தொழிலாளர்கள் மூலம் உடலை அப்புறப்படுத்தியதும் அம்பலமானது. இந்நிலையில், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முனியம்மாள் உட்பட 5 பேரை கைது செய்து, தலைமறைவாக இருக்கும் தோட்ட உரிமையாளரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்