குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்தையே மூழ்கடித்த திடீர் வெள்ளம் - கோவில்பட்டியில் பரபரப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பலத்த மழை பெய்தது.


இதனால் இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கபால பாதையில், முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியது.


அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி வாகனம் மழைநீரில் சிக்கியதால், குழந்தைகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.


குழந்தைகள் எழுப்பிய சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று குழந்தைகளை காப்பாற்றினர்.

7 ஆண்டுகளுக்கு மேலாக, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், இதை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை என்றும் பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்