லஞ்ச ஒழிப்புத்துறை SI வீட்டிலே நடந்த கொடூர கொள்ளை - அதிர்ச்சியில் ஈரோடு

x

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டிலிருந்து, தங்க - வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகன். இந்தநிலையில், இவரது வீட்டின் பூட்டை நெம்பி திறந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த நான்கு பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள், 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்