83 காலியிடங்கள்.. - "முடியவே முடியாது" - தேசிய மருத்துவ ஆணையம் கிடுக்குப்பிடி

x

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் 30ஆம் தேதி பிறகு மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 16 இடங்களிலும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் உள்ள 50 இடங்களிலும்,தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் 30ஆம் தேதி பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மகாராஷ்டிரா ,பீகார்,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு சேர்க்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை செல்லாது எனவும் அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்